- நூதன பிரசாரம்
- திராவிட
- பெரம்பலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பாஜக அரசு
- மோடி அரசு
- திமுக
- சபாநாயகர்
பெரம்பலூர்,மார்ச்20: நடைபெற உள்ள நாடாளு மன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசின், மோடி அரசின் மோசமான ஆட்சிஅவலம் குறித்தும், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமை குறித் தும் வாக்காளர்களுக்கு எளிதில் புரியும் விதமாக, பொதுமக்களை ஈர்க்கும் விதமாக, திமுக தலைமை கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் என்பவர் குடு குடுப்பைக்காரர் வேடம் அணிந்து, நேற்று(19ஆம் தேதி)காலை 6.30மணிக்கு, பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறை மங்கலம் பகுதியில், தெருத்தெரு வாக, சிறு உடுக்கையை அடித்தபடி, ”ஜக்கம்மா சொல்றா- ஜக்கம்மா சொல்றா” எனக் கூறி குடு குடுப்பைகாரனைப்போல், நூதன முறையில் பொது மக்களிடம் பிரசாரம் செய் தார். நிகழ்ச்சியை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாக ரன் தொடங்கி வைத்தார்.
The post திராவிட மாடல் ஆட்சியின் ெபருமை குறித்து தலைமை கழக பேச்சாளர் நூதன பிரசாரம் appeared first on Dinakaran.